462
36.
37.
இளங்குமரனார் தமிழ் வளம் 17 பெரியோர் பிழைப்பின் பேருல கறியும் பெரியோ ருழையும் பிழைசிறிதுண் டானும் இருநிலத்தில் யாரு மறிதல் - தெரிவிக்கும் தேக்குங் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம் வாக்கு மதிமேன் மறு.
-
வீரசோ. அலங். 32. மேற்.
பெரியோர் கடமை பிறிதுயிர் காத்தல்
எண்ணும் பயன்தூக்கா தியார்க்கும் வரையாது
மண்ணுலகில் வாமன் அருள்வளர்க்கும் - தண்ணறுந்தேன் பூத்தளிக்குந் தாராய் புகழாளர்க் கெவ்வுயிரும்
காத்தளிக்கை யன்றோ கடன்.
-வீரசோ. அலங். 20. மேற்.
பெரியோர் பெருமையைப் பேசும் உலகம்
38.
உலகினுட்.
39.
பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய 'இறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே சிறுதகையார் சிறுதகைமை சிறப்பென்றும் பிறழ்வின்றி யுறுதகைய வுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே.
-யாப்.வி. 94. மேற்.
15. (109) நிரைகோடல்
ஒருவர் ஒருவர் உணராச் செலவு
ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.
1. இருவரைமேல்.
-தொல்.பொருள். 58. நச். மேற்.