உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பிறக்கிடங் கொடாத பெருந்திறல் வீமன் வானவர் போரிற் றானவர்க் கடந்த

104.

மான வேந்தன் யானையிற் றனாஅது

479

பல்படை நெரிவ தொல்லான் வீமன்

பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மர்பொடு நிலஞ் சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன்

பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே.

இன்னா இன்பம் எய்திய களப்போர்

105. நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந்

திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது

வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச்

சூர்மருங் கறுத்த நெடுவேள் போல

மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய

வாளுகு களத்து வாள்பல வீசி

யொன்னா மன்னரு மாடினர் துவன்றி

யின்னா வின்ப மெய்தித்

தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே.

-

பாரதம்

-பாரதம். தொல். பொருள். 72. நச். மேற்.