520
வெம்பசி
-
இளங்குமரனார் தமிழ் வளம் 17
(1327) எயிலகம் - மதிலுள். புக்கன்றி - புகுந்து அல்லாமல். பொற்றேரான் முற்றுகையிட்ட வேந்தன். போனகம் - உணவு. கொடிய பசி. பசித்தீ: உருவகம். மறலி - கூற்றுவன். எற்றாங்கொல் - என்னாமோ? எயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகம் கொள்ளான். மறலி வயிறு எற்றாங்கொல்?
-
ஒப்பு: “நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயி றருத்தலும் செல்லான்'
66
காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு”
(மூழை - அகப்பை).
-புறம். 304.
புறப்பொருள் வெண்பாமாலை 117.
- 1328) அன்னதோர் பெற்றித்தே - அத்தகையதோர் தன்மையதே. வாய் வாங்கு வெல்படை - வாய்மை அமைந்த வெற்றிமிக்க படை. விரும்பாதார் - பகைவர். முற்றி - முற்றுகை இட்டு. கொல்படை - இரக்கமின்றிக் கொல்லும் படை வீரர். வீட்டும் - அழிக்கும். விரும்பி அடிபணிந்திருந்தால் வேந்தன் ஏற்றுக் கொண்டிருப்பான். அவ்வாறு
-
செய்யாமையால் அவன் வீரர்களின் கைப்பட்டு அழிந்தனர். இத்தன்மை தாய் வாங்குகின்ற மகனைத் தனக்கென்று பேய் வாங்கிக் காண்ட தொப்பதாம் என்றவாறு. பேய் வாங்கிக் கொள்ளுதல்,
கொலைப்பொருட்டு.
“இடு பிணந்தின்னும் இடாகினிப் பேய்வாங்கி மடியகத் திட்டாள் மகவை'
99
-என்பதையும் (சிலப். 9:21)
பேய் கோட்பட்டான்' என்பதையும் (நன். 256) நோக்குக.
(1329) எயில்கோள் - மதிலைக் கொள்ளுதல். மஞ்சு - மேகம். புரிசை - கோட்டை. பொறியும் - எந்திரங்களும். அவை, வளைவிற் - பொறி, கருவிரலூகம், கல்லுமிழ் கவண் முதலியவாகக் கூறப்பெறுவன. (சிலப். 15: 207 - 216). ஐம்பொறிகளும் அடங்கிய ஆன்றோர் போல் 15:207-216). கோட்டையின் அனைத்துப் பொறிகளும் அடங்கின என்பதாம். அவற்றின் ஒடுக்கத்தால் வேந்தன் வீரமாண்பு வெளிப்படுத்தவாறு.