25.
26.
புறத்திரட்டு
533
இல்லறத்தார் பெறுமவற்றுள் அறிவறிந்த மக்கட் பேறே சீரியதாகலின், துறவறத்தார் பெறுமவற்றுள் மெய்யுணர்வே பேறு என்க. இரண்டன் பயனும் இன்பமாம்.
கொண்டது கொடுக்கவும், கொடுத்தது கொள்ளவும் உலகியன் முறை உளதாகலின் இரண்டும் அகன்ற பற்றற்ற நிலை கொள்க என்பதாம். நாடுதல் - விரும்புதல். அன்மை - விரும்பாமை இருவினையும் சேராமைக்கு வழி குறித்தார். தீர்த்தான் இழிதகைமை தீர்த்தான். முட்டறுத்தல் தடையை நீக்குதல், வழுவகற்றுதலுமாம். கட்டறுத்தல் பிறவிப் பிணியை அறுத்தல்.
27. அத்தை
28.
29.
30.
—
-
-
அதை. ஒன்றினும் ஒன்று பார்க்க அரிதாம். எழுதுதல், படித்தல், கற்றல் பயன்காணல், நிற்றல் என்பவை படிப்படியே அரிதாதல் அறிக.
—
நண்ணினர் - நண்பர், அன்பால் நெருங்கினவர். நண்ணார் - பகைவர். கோடாமை ம ஒருசார் சாயாமை. அஃதாவது மனங்கோணாமை. இருங்கழல் - வலிய கழல். கழல விடப் படும் காலணி கழலாயிற்று. கழலில் அணிவதாலும் அப்பெயராம். கோடாமை, எண்ணல், காத்தல் வேந்தர்க்கியல்பென்க.
சிறைப்படுவ புட்குலமே; சிறைவைக்கப் படுவார் இலர்; சிறகுகளை உடையவை பறவைகளே; அணை கட்டி நீர் தேக்குவதுண்டாகலின், ‘தீம்புனலும் அன்ன' என்றார். இவண் சிறை (தடை) அணை என்பதாம். 'கொடியன’ எவையும் இல்லை; குன்றத்து மாளிகைகளும், பூங்காக்களும் கொடி களை யுடையனவாம்.
வண்ணீர்மை
- வெள்ளிய தன்மை. உள்ளீடின்மையைக் காட்டுவதும் வெண்மையாம். "ஒளியார் முன்” என்னுங் குறளில் 'வெளியார்' என்றார் அறிவிலாரை. இங்கே, வெண்ணீர்மை யுடையார் இலர், முத்தே வெண்ணீர்மைய; கண்ணீர் வடிப்பார் இலர், கள் (தேன்) நீர் வடிப்பது பொழிலே; இரங்கி அழுவாரிலர்; யாழே மெல்லி தொலிக்கும். கோல் நிலவு நிலம் - ஆட்சி நிகழும் இடம்.