இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. அறத்துப்பால்
1. கடவுள் வாழ்த்து
(“தான் வழிபடுங் கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்”
-
- பரிமேலழகர்.
இதே பெயருடைய அதிகாரங்கள்: திருக்குறள் - 1. பன்னூல் பாடற்றிரட்டு - 1. பெருந்தொகை - 1.)
1.
ஆதிரை யானால் அமைந்த துலகே மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையா னாதிரையா 'னென்றே யறையுமால் ஊர்திரைநீர் 'வேலி யுலகு.
- முத்தொள்ளாயிரம் 1
தாமரைக் கண்ணன் தகையடி வாழ்க
2.
மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி
னெதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ‘ரொக்கும் நிறம்.
- நான்மணிக்கடிகை 1
1. னென்றென். றயருமால்; னென்றென் றயர்வுறுமீ
2.வேலை.
3. ரேய்க்கும்,