3.
4.
5.
1.சோலை.
6.
புறத்திரட்டு
பூவை வண்ணன் புகழடி வாழ்க
கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும்
பூவைப்பூ வண்ண னடி.
இறைவன் திருவடி ஏத்துதல் இனிதே
69
- திரிகடுகம் 1
கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்த லினிது.
இனியவை நாற்பது 1
செங்கதிர்ச் செவ்வேள் சீரடி போற்றி
நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக்
காலை யிருள்சீக்குங் காய்கதிர்போற் - 'கோல
மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன்
அணிச்சே வடியெம் மரண்.
மூவா முதலின் சேவடி போற்றி
இரும்பல்காஞ்சி 1
மூவா முதலாவுலகம்பெமாருமூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே
- சீவகசிந்தாமணி 1