உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

119

தரமேம்பாடு:

இனித், தர மேம்பாட்டுக்கு வள்ளுவர் காட்டும் வழிகள் எவையேனும் உண்டா? என எண்ணலாம்.

வள்ளுவத்தின் ஒட்டு மொத்த ஊடகமே, "பிறர்க்கு மட்டுமன்று: பிறவுயிர்க்குத் தீமை செய்யாமை" என்பதேயாம். இந்நோக்கு இல்லாமல் எதனையும் சொல்லாப் பெருநோன்பர் அவர் ஆதலால் எவ்வுயிர்க்கும் தீமையிலா நல்லாக்கமே வள்ளுவர் வழங்கும் ஆக்கமாகும்.

இனம்:

ஒர் உருவாக்கத்தில் ஈடுபவார் ஓரினத்தராய்த் திகழ வேண்டும் என்பது வள்ளுவர் உள்ளகம்.

இன்+அம்=இனம், தனக்கு இன்பம் செய்வதாக அமைந்தது எதுவோ அதுவே இனமாம்.

அவ்வினம், வெவ்வினமாக அமைந்து அளவளாவிக் கடமை புரிந்தால் எத்தரமும் உருவாக்கத்தில் அமைதல் த உறுதி.

“கரை இல்லாமல் ஏரி குளங்களில் நீரைத் தேக்க இயலாது. அதுபோல் அவ்வளவுதான் இல்லாத வாழ்வில் ஒட்டுறவு இராது” என்பது திருக்குறள்.(523)

அளவளாவுதல் என்பதே மனக்கலப்பில் உண்டாவது மனக்கல்ப்பு, இருமையை ஒருமையாக்கிவிடும். இரண்டற்ற ஒன்றிலே சிக்கல் தலைகாட்ட இயலாதே! அதனால், நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும் என்றார் திருவள்ளுவர்.

இனிய அளவளாவுதல், இரண்டற நிரந்து விடுதல் ஆகிய இரண்டும் கூடிய இனத்தொடும் கலந்து பேசி உருவாக்கம் புரிந்தால், அவ்வுருவாக்கத் தரம் மிக உயர்ந்ததாகவே இருக்கும் ஆதலால்,

66

' தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்"(462)

என்றார்.