வாழ்வியல் வளம்
131
வயலும் தோப்பும் வளங்காட்டும் சூழலின் இடையே - அமைந்துள்ளது “பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானபீடம்.” அப்பீடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுள் ஒன்றே
தாலப்பொலி நிகழ்ந்த நாள் 1-3-87 ஞாயிற்றுக் கிழமை.
1984இல் ஆனந்த விகடன் கிழமை இதழின் அட்டைப் படச் செய்தியொன்று வள்ளுவர் பற்றாளரைக் கவர்ந்தது. அதனை அழகாக எழுதியும் படமெடுத்தும் உதவியவர் பிசுமி என்பார். அவர்தம் குறிப்புகள் ஒரு புதிய குறளாய அமைப்பாளரு மாகிய வேலா. அரசமாணிக்கனார் தம் குடும்பத்தோடு சென்று ஞானபீடங்கண்டு களிப்புற்றார். பல்லடம் திருவள்ளுவர் மன்றத்தார் மா.ஆறுமுகனார், தென்மொழி முத்துக்குமரனார் ஆகியோரும் கண்டு களிப்புற்றனர். தட்டாம்படி ஞானபீ கொள்வதற்குத் தூண்டுதல் ஆயிற்று.
ஆடவர்
மகளிர்
ஆண்டு
ஆ
மக்கள்
என
இவற்றின் விளைவு விழாவில் கலந்து
பல்லடம் திருவள்ளுவர் மன்றத்தார் ஏற்பாட்டின்படி ஐம்பத்தாறு பேர்கள் தனிப்பேருந்தில் செல்ல வாய்ந்தது. சென்ற அனைவரும் வள்ளுவ வாழ்வுக் குடும்பத்தார் முழுதுற ஏற்கத் தக்க பண்புக் கிழமையர் என்பது சுட்டத்தக்கதாம்.
சுற்றுலாக்குழுவின் வண்டி,வள்ளுவர் ஞானபீடச்சாலையை அடுத்து வரும்போதே ஓடி வந்து சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சி வெள்ளம், பேரியாற்று வெள்ளத்தை ஒப்பதாம் அவர்களின் விழாவில் கலந்து கொள்ள அல்லவோ வண்டியளவு ஆள் வந்துள்ளது: பின், வண்டியளவு மகிழ்ச்சி இராதா?
வண்ணத்தாள்களும் தொங்கல்களும் வரவேற்க ஞான பீடத்தை அடைகிறோம். பீடத்திலே வள்ளுவர் திருப்படம்: அதன் பின்சுவரில் கறுப்பு வண்ணச் சதுரம்: சதுரத்தின் ஊடே சவ்வண்ண வட்டம்! வள்ளுவர் திருப்படத்தின் முன் நிலைவிளக்கு. இது கருவறை: இவ்வறைக்கு முன்னர் வழிபாட்டு மன்றம்: கீற்றுக் கொட்டகை.
சூ ம் காட்டல், வழிபடல், வாழ்த்துரைத்தல், சந்தனம் வழங்கல் அவ்வளவே நிகழ்ச்சிகள்! சூழல் அமைதி போலவே மக்கள் உள்ளத்தும் அமைதி! உய்யும் வழி; கைவந்த களிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தவழ்கிறது!