உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 18

எல்லாம் ஒருருக் கொண்டு முழுமையாக அமைந்த ஒர் அரிய படைப்பே தோழி என்பது தெளிவாகும்.

தோழிக்கும் தலைவிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை: அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவளும் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள் இவளைத் தோழி என்கிறாள்: இவள் அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக்களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. அவர்கள் தோழமை! தோழி, தலைவியை ‘அன்னை' என்று உள்ளன்பால் அழைப்பாள்: 'நம் தாய்’. ‘நம் தலைவர்’, நம் வாழ்வு’, ‘நம் உயிர்' என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர் தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை ஒரு தோழி சொல்கிறாள்:

தாயோ தன் கண்ணைவிட இவளை மேலாக விரும்பு கிறாள்: தந்தையோ, இவள் கால் நிலத்தில்படுவதையும் பொறுக் காதவனாய் ‘உன் சிற்றடி சிவக்குமாறு எங்குச் செல்கிறாய்” என்று தடுப்பான். நானும் இவளுமோ பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால், இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! தலைவியும் தோழியும் இரண்டு தலைகளையுடைய ஒரு பறவையாம்! ஓர் உயிராம்! எத்தகைய அரிய உவமை! இதைக் கருதித்தான் தொல்காப்பியனார் தாங்கருஞ்சிறப்பின் தோழி' என்றார் போலும், தோழி சொன்னது

L

து.

இனித் தலைவன் சொல்கிறான். “தோழி எதைச் செய் கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி! மிதப்பின் தலைப் பக்கத்தைத் தோழி பிடித்தால்,தலைவியும் அத்தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள்: மிதப்பின் அடிப்பக்கத்தையே தோழி பிடித்தால், தலைவியும் அப்பக்கத்தையே பிடிக்கிறாள்: மிதப்பை விட்டு வி ட்டுத் தோழி வெள்ளத்திலே போனால் தலைவியும் போய் விடுவாள் போலும்!”

தோழியும் தலைவியும் புதுத் தொடர்பினர் அல்லர், தோழியின் தாய், தலைவியின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே: தோழியின் தாய்க்குத் தாயும், தலைவியின் தாயின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே. இம்மட்டோ? தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயும் ஆவள். ஆதலால், வாழையடி வாழையாக வருவது தலைவி தோழி தொடர்பாகும். பழங்கால அமைந்த வாழ்வு. இவ்வுரிமைக்கு இடந்தந்து நின்றது.