வாழ்வியல் வளம்
79
“நீங்கள் தொண்டு செய்யச் செல்லலாம்” என்றார் புத்தர் பிரான் தொண்டில் புகும் அனைவருக்கும் உரிய அறை கூவல் அன்றோ இது
புத்தர் உலகியலை நன்கு ஆராய்ந்தவர். மணிமணியான கருத்துகளை வழங்கியுள்ளார்.
அதனால்
“உலகோர் அமைதியாக இருப்பவனையும் பழிக்கின்றனர்; மிகுதியாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர்: குறைவாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர். இஃது இன்று தோன்றியது அன்று. பழமை தொட்டே வருவது. பழிக்கப் படாதவர் எவருமே உலகில் இலர்? முற்றிலும் பழிக்கப் பட்டவரும், முற்றிலும் புகழப்பட்டவரும் ஒருகாலும் இருந்ததில்லை. ருக்கப் போவதும் இல்லை; இப்பேதும் இல்லை.
99
வாழ்வில் வெற்றி கண்டவர் புத்தர். அவர் எவற்றை எவற்றால் வெல்ல வேண்டும் என்பதை விளம்புகிறார். “சினத்தை அன்பால் வெல்க” தீயதை நல்லவற்றால் வெல்க”; "கருமித்தனத்தைக் கொடையால் வெல்க”; “பொய்யை மெய்யால் வெல்க”; ஆயிரம் பகைவரை வெல்பவனிலும் தன்னை வெல்பவனே பெருவீரன்! ஆம்! புத்தர் பெருமான் தம்மை வென்ற பெருவீரர்.
மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீநெறிக் கடும்பகை துறந்தோய் நின்னடி! பிறர்க்கறம் முயலும் பெரியோர் நின்னடி!
துறக்கம் வேண்டாத தொல்லோய் நின்னடி!