192
இளங்குமரனார் தமிழ்வளம் - 19
அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும்.
எ-டு:
“மரபுநிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல்தாம் இருவகை இயல்
முதலும் வழியுமென நுதலிய நெறியின்”
(நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க)
(1593)
புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம்.
“இன்னா வைகல் வாரா முன்னே
செய்நீ முன்னிய வினையே
முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே
-ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா).
ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு
வண்ணம்.
“உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் "..
(106)
ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனையும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது.
“சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்'
(349)
எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை
பொருந்தி வருவது எண்ணுவண்ணம்.
எ-டு : டு:
“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் ”
(1589)
அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு
வண்ணம்.
அகைத்தல் = அறுத்தல்.
66
"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே....
(1526)
தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது
தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது.