உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

"வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்

என்னும் நூற்பா விளக்கத்தில் (198), ““வேற்றுமை கொள்ளாது' என்னாது காலமொடு தோன்றுமெனின் தொழில் நிலை ஒட்டும் தொழிற் பெயரும் வினைச் சொல்லாவான் செல்லுமாகலானும், 'காலமொடு தோன்றும்' என்னாது வேற்றுமை கொள்ளாது எனின் இடைச் சொல்லும் உரிச் சொல்லும் வினைச்சொல்லெனப்படும் ஆகலானும் அவ்விரு திறமும் நீக்குதற்கு ‘வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்” என்றார். வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடைய என்றற்கு ‘நினையுங் காலை' என்றார்” என்பது அத்தகையவற்றுள் ஒன்று.

6

இடையியலில் ‘எல்லே இலக்கம்' என்றொரு நூற்பா அமைந் திருத்தலைக் காண்கிறார் சேனாவரையர். அஃது உரிச்சொல் ஆதலால் உரியியலில் இடம் பெறவேண்டும் என்று நினைக்கிறார். ஆயின் நூற்பா இடையியலில் அன்றோ கிடக்கின்றது! அதனை மாற்றியமைத்தல் நூன்முறையாகாது என்று எண்ணியவராய், “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான் இடைச் சொல் என்று கோடும்" என்கிறார். இதனால் நூலாசிரியர் நுவற்சியைத் தலைமேல் தாங்கிச் செயற்பட வேண்டும் உரையாசிரிய மரபை உணர்த்தி விடுகிறார் அவர். அதற்கு அவரே சான்றாக விளங்குவதைத் தம் எழுத்தா லேயே புரிவிக்கவும் செய்கிறார் (269). முந்நூற்றுத் தொண்ணூற்றொன் பதாம் நூற்பா விளக்கத்திலும் இக்கருத்தைத் தெளிவிக்கிறார்.

இடைச்சொல், உரிச்சொல் முதலியவற்றை இடைச் சொற்கிளவி, உரிச்சொற் கிளவி என ஆள்கிறார் ஆசிரியர். இவற்றுள் கிளவி என்பது மிகை என்று கருதுவார் உளராகலாம் என எண்ணிய சேனாவரையர், 'கிளவி என்பது மிகையெனின்; மிகையாயினும் இன்னோரன்ன அமைவுடைய என்பதுணர்த்துதற்கு அவ்வாறோதினார் என்பது” என அமைதி கூறுகின்றார். இன்னவை நூலாசிரியர் ஆணைவழிச் செல்லும் உரைமரபு காட்டுவன என்க.

6

நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று ‘உய்த்துணர வைத்தல்’ என்பது.எனினும், சில இடங்களில் உய்த்துணர வேண்டாமல் வெளிப்பட நூல் இயற்றுவதும் வழக்கே. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனா வரையர் நயம்பட உரை வரைகின்றார். 'வழாஅல் ஓம்பல்' என்று வழுவாமல் காத்த ஆசிரியர் (13),