இருசொல் அழகு
89
எண்ணிக்கையால் நூறாக்கல் கருதியது மட்டு மன்று இது. இப்படிப் புனைய இதனைப் படிப் பார்க்கும் இயலும் என்பதைத் தூண்டவே இது செய்யப்பட்டதாம்.
பு-ம் :
அரிசி மாவு புளித்ததேன்?
அந்தப் பிள்ளை அரண்டதேன்?
ஆட்டிவைக்க ஆட்டிவைக்க
வி-ம் : அரிசியை மாவாக ஆட்டி வைத்தால் வெப்பத்தால் புளிப்பு ஏற்படும். அதற்கு அரிசியை ஆட்டி(அரைத்து) வைக்க வேண்டும்.
அடித்துமிரட்டித்துடிக்கச் செய்வதில்சிலர்க்கு இன்பமுண்டு. அவர்கள் அலைக்களிப்பாளர். அவரைக்கண்டாலே குழந்தைகள் அஞ்சி நடுங்கும். ஆட்டி வைத்தல் = அலைக்கழித்தல். பு-ம்:
அழகு வண்டி ஓடுவதேன்?
(78)
அரிய நீறு ஆவதேன்?
அச்சாணியால் அச்சாணியால்
வி-ம் : எந்த வண்டி எனினும் அச்சாணி வேண்டும். அச்சு + ஆணி = அச்சாணி. தேருக்கும் அச்சாணி உண்டு. நடை வண்டிக்கும் உண்டு.
அரிய நீறு = அருமையான திருநீறு. அதனைச் சாணி யாலேதான் செய்வர். ஆதலால் மூலப் பொருள் அதுவாகும். அ + சாணி = அச்சாணி.
=
(79)
பு-ம்:
ஆய்வுக்காகச் சென்ற தெங்கே? ஆசைக்காக முத்திய தெங்கே?
செவ்வாய்க்கு செவ்வாய்க்கு
வி-ம் : அறிவியல் ஆய்வாளர்கள் திங்களை ஆய்ந்தனர். இதுகால் செவ்வாய் என்னும் கோளினை ஆய விண் ஓடம் செலுத்துகின்றனர். அதனைக் குறிப்பது முன்னது. செவ்வாய் = கோளின் பெயர்.
ஆர்வத்தால் மழலையர்க்குப் பரிசாகத் தாய்மார் குழந்தை களின் சிவந்த வாயில் முத்தம் தருதலைக் குறிப்பது பின்னது. செவ் வாய் = சிவந்த வாய்.
(80)