90
இளங்குமரனார் தமிழ் வளம் – 20
பு-ம்:
ஆனையை வென்ற தெதனாலே?
அறுவடை, காலத்தே முடிந்த தெதனாலே?
வேலை ஏவி வேலை ஏவி
வி-ம் : யானைப் போர்க்கு உரிய கருவி வேல் ஆகும். அஞ்சாது வேலை ஏவி வெற்றி பெற்ற வீரனே வேலன் என்க. வேல் = கருவி.
அறுவடைக்கு ஆள்விடுத்துப் பயனில்லை. நின்று வேலை செய்வாரை ஏவி வேலையை முடித்தல் வேண்டும். வேலை = தொழில்; தொழில் புரிபவர்.
பு-ம் :
ஓடாய் உடைந்து கிடப்பதேன்?
ஓலமிட்டுக் கதறுவதேன்?
(81)
கலம் கவிழ்ந்து கலம் கவிழ்ந்து
வி-ம்: அடுக்கிவைக்கப்பட்ட மண்பாண்டம் கவிழ்ந்தால் உடைந்து ஓடாகக் கிடக்கும். கலம் = ஏனம் (பாத்திரம்).
=
கடலில் சென்ற கப்பல் கவிழ்ந்தால் தப்பிப் பிழைக்க ஒவ்வொருவரும் ஓலமிட்டுக் கதறுவர். ஓலம் = கூக்குரல். கலம்
=
கப்பல்.
பு-ம்:
கடன் கேட்பவர் நிலையென்ன?
களஞ்சியம் பதத்தால் நிலையென்ன?
(82)
மடிபிடித்தல் மடிபிடித்தல்
வி-ம் : முன்னாளில் பணப்பையை மடியில் வைக்கும் வழக்கத்தால் கடன் தந்தவர் மடியைப் பிடித்துப் பார்ப்பர். மடி இடுப்பு வேட்டி.
களஞ்சியத்தில் உள்ள தவசத்தில் ஈரம் பட்டால் ஒரு நெடி உண்டாகும். அத்தவசம் கெட்டுப்போன அடையாளம் அது. மடி=மடித்துப் போதல்.
பு-ம்:
உள்ளத் தச்சம் உறுவதேன்?
உருகிக் கண்ணீர் வடிப்பதேன்?
(83)
வேங்கை கண்டு வேங்கை கண்டு