94
இளங்குமரனார் தமிழ் வளம் – 20
வி-ம் : தஞ்சாவூர் பொம்மை என்பவை தலை யாட்டிப் பொம்மை என்றே பெயர் வழங்கி வருகின் றது.
99
தாமாக உழைத்துப் பிழைக்கமாட்டாமல் பிறர்க்கு ச்சகம் பேசி வாழ்பவர் தம் தலையாட்டி, “ஆமாம் ஆமாம் என்றே வாழ்பவராக இருப்பர்.
பு-ம்:
தமிழர் பொங்கல் பேரென்ன?
தாளக் கட்டின் ஒலிப்பென்ன?
(94)
தை தை
வி-ம் : தமிழர் திருநாள் - பொங்கல் நாள். அது தைத்திங்கள் முதல் நாள் ஆகும். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.
L
நடம் ஆடுவதற்குக் கால் வரிசை வைக்கத் தட்டி ஒலிக்கப் படும் தாளம் 'தைத் தக்க தை’ என்பதாம். தை என்பது தாளத்தின் முதல் ஒலி.
பு-ம்:
தாழ்ந்த கிளை நிமிர்வதேன்?
தழைத்த சேறு சாறாவதேன்?
(95)
- கொம்பை வெட்டிக் கால் கொடுக்க கொம்பை வெட்டிக் கால் கொடுக்க
வி-ம் : தாழ்ந்த கிளை நிமிர்வதற்கு மற்றொரு மரக்கிளையை (கொம்பை) வெட்டிஊன்று காலாகத் தந்தால் போதும். நிமிர்ந்து விடும். கொம்பு = கிளை; கால் = ஊன்று, முட்டு.
சேறு என்பதில் இரட்டைக் கொம்பு முன்னாக உள்ளது. அதனை நீக்கி, ஆ என்பதற்கு அடையாள மான கால் (r) தந்து விட்டால் சே என்பது சா ஆகிவிடும். சேறு என்பது சாறாகும். கொம்பு, கால் என்பவை எழுத்துக் குறியீடுகள். அந்தகக் கவிவீர ராகவர் அம்மைச்சி வரலாற்றின் பின்னணி யுடையது இது.(96) பு-ம்: நல்லறி வில்லாமை ஏன்?
நடையில் நொண்டி ஆவதேன்?
– முட்டாளால் முட்டாளால்
வி-ம் : நல்லறிவு இருக்குமானால் அவனை அறிந்தவர் முட்டாள் எனக் கூறார். தன்னறிவோ சொல் வார் அறிவோ இல்லானே முட்டாள் என்று பழிக்கப்படுவான்.