96
இளங்குமரனார் தமிழ் வளம் – 20
முச்சொல் அலங்காரம்
இருசொல் அலங்காரம் அச்சிட்டபின் தொடர்ச்சி யாக அச்சிடப்பட்டிருந்தது இது.
காப்பு
மு-ம்:
வி-ம் : மு-ம்:
சச்சி தானந்தன் தாள்இணை பணிந்து முச்சொல் அலங்காரம் யான் மொழிவேனே. சச்சி தானந்தன் = சிவன். தாள் = திருவடி. அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும் வெட்கஞ் சிக்கில் லாதான் வீரியமும்
துக்கப்பட் டுண்ணாதான் சோறும்
-
கைக்கித் தின்ன நாயோ டொக்கும்.
- இம் மூன்றும்
வி-ம் : அக்குத் தொக்கு = உற்றார் உறவு; வளம் வாய்ப்பு. வெள் கஞ்சிக்கு இல்லாதவன் = வெறுங் கஞ்சிக்கும் வழியற்றவன்; உழைத்துத் துன்பப் படாமல் உண்பவன். கைக்கி = கக்கி. தான் தின்ற உணவைக் கக்கி மீண்டும் அதனைத் தின்னல் நாயின் இழிதன்மை. துணையில்லான் துணிவு வெட்கக் கேடானது கஞ்சிக்கு வழியற்றவன் சொல்லுக்குக் காது தரார் எவரும், உழைத்து உண்ணாதவன் ஊர்க் கேடன் என்பவை பலரும் பயில வழங்குபவை. (1)
மு-ம்:
ஆடோடு ஆடிய காடும்
அரசனோடு ஆடிய ஊ ரும்
அடிக்கடி தாய்வீடு ஓடிய பெண்ணும்
பேயோடு ஆடிய கூத்து.
- இம் மூன்றும்