தனிப்பாடல் கனிச்சுவை
163
61. முத்து
வெண்பாப் புலிக்கவிராயர் என்பவர் எட்டையபுரத்திற்குப் போயிருந்தார். அங்கிருந்த பெண்களின் பற்கள் மிகத் தூய்மையாகவும், அழகாகவும் இருந்தமை புலவரைக் கவர்ந்தது. அதனால் அப் பற்களைச் சிறப்பித்து ஒரு பாடல் பாடினார்.
தூது மதுரை, துவரை-கடை இடை முன் மூன்றெழுத்தை ஒக்கும் பற்கள்” என்றார்.
‘தூது’ என்பதில் கடைசி எழுத்து ‘து’. ‘மதுரை’ என்பதில் ை எழுத்து ‘து’. ‘துவரை” என்பதில் முன் எழுத்தும் ‘து’. 6 எத்தனை ‘து
வந்துள்ளதல்லவா!
66
வந்துள்ளன?
மூன்று ‘து’-முத்‘து’!
பற்கள் முத்துப்போல் உள்ளனவாம்!
தூதுமதுரை துவரை கடையிடை முன்
ஓதுகின்ற மூன்றெழுத்தை ஒக்குமே - நீதி செகராச ராசர்கள்தம் சிங்கே(று) இளசை நகரார் இளையர் நகை.
செகராசராசர்
உலகிலுள்ள பேரரசர்கள். சிங்கஏறு ஆண் சிங்கம். இளசை
எட்டையபுரம். நகர் ஆர் இளையார் - நகரிலுள்ள அழகிய இளம் பெண்கள். நகை – பல்.