34
> இளங்குமரனார் தமிழ் வளம் – 20
தீயோர் தன்மையைத் தெளிவான உவமைகளால் நம் முன்னோர்கள் விளக்கி நமக்கு அறிவுறுத்தி யுள்ளனர்.
“ஈக்கு விடம் தலையில் மட்டும் இருக்கும்; தேளுக்கு விடம் காடுக்கில் மட்டும் இருக்கும்; பாம்புக்கு விடம் பல்லில் மட்டும் இருக்கும்; ஆனால், தீயவர்க்கு விடம் உடலெல்லாம் நிரம்பி இருக்கும்” என்று கூறினர். இதனால் தீயவரைக் கண்டு நாம் ஒதுங்க வேண்டும் என்றும் கூறினர்.
எப்படி ஒதுங்க வேண்டும்? இதனையும் தெளிவு படுத்தியுள்ளனர்.
"கொம்புள்ள மாட்டுக்கு ஐந்து முழம் விலகு; குதிரைக்குப் பத்து முழம் விலகு; கொடிய யானைக்கு ஆயிரம் முழம் விலகு; ஆனால் தீயவர்களின் கண்ணில் தெரியாத தொலைவுக்கு ஓடிவிடு” என்பது அவர்கள் உரை.
சேரும் இடம், சேரும் வகை, சேரும் பயன் இவற்றை அறிந்து பயன் என்ன? அதனைப் பின்பற்றினால்தானே பயன்? தேன் என்றால் இனிக்குமா? நாவில் எடுத்து வைத்தால் அல்லவா இனிக்கும்!