உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

49

பெருநடை நடந்து சிறுகுடியை நெருங்குகிறான் வேந்தன். அவன் செல்லும் வழியில் முட்டநிரம்பிய வயிற்றொடு கிட்ட நெருங்கி வருகிறது ஒரு கூட்டம் அவர்கள் அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் வெளிப்படுகிறது. அவர்கள் பாணிசைத்து வாழும் பாணர்கள்.

பாணர்களை நோக்கிய அதேபொழுதில் அவன் செவியில் ஓர் ஒலி கேட்கின்றது. ஒலி மட்டுமோ?

முட்டைகளைத் தூக்கிக் கொண்டு திட்டை மேலே ஏறும் எறும்பு வரிசைகள் போலச் சோற்றுக் கலங்களைத் தூக்கிக் கொண்டு இப்பாலும் அப்பாலும் வரிசை வரிசையாகச் சிறுவர்கள் செல்வதையும் காண்கிறான்.

66

இந்த ஒலி எங்கே இருந்து வருகிறது. இச் சிறுவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள்? நான் தேடிவரும் சிறுகுடி அணித்தே தோன்றும் இவ்வூரோ? அன்றி வேறோர் ஊரோ?” எனத் திகைக்கிறான். தன் திகைப்பை வினாவாக்கிப்பாணர் களிடம் கேட்கிறான்.

பண்ணன் சிறுகுடி அதுவே என்றும், பண்ணன் வழங்கிய உணவை உண்டு மகிழ்வார் ஒலியும், கொண்டு செல்வார் வரிசையுமே தான் கேட்பதும் காண்பதும் என்றும் அறிந்து கொள்கிறான்.

"நாட்டில் பசியும் பிணியும் பகையும் நலிவும் இல்லாமல் காக்க வேண்டுவது காவலனாம் என்கடன்.என்க னை என்னைப் பார்க்கிலும் இவனல்லனோ நன்றாகச் செய்கின்றான்.என் க னை நானே செய்தலில் என்ன சிறப்பு? என்கடனைச் செய்தேன் என்ற அளவில் ஓர் நிறைவு. அவ்வளவே! ஆனால், இவன் செய்வதோ உயிர் இரக்கம் ஒன்றாலே செய்யும் உயர்வற உயர்ந்த உயர் செயல்! இவனல்லனோ உலகை வாழ வைப்பதற்காக நெடிது வாழ வேண்டியவன்!

பண்ணன்! ஆ! ஆ! பண்ணன்! இப்பெயர், எத்துணைப் பேர் இசைத்து மகிழும் பெயர்! இசைந்து வழங்கிய பெயர்!'

இசை எவரையும் இசையவைப்பது.இவ்விசை யாளன் தன் னிய கொடையால் இசை போலவே இசை வைத்துள்ளான்.

பண் அன்னவனை எப்பெயரால் அழைப்பது?பண்ணன் என்பதே ஆகும். நல்லவற்றைத் தேர்ந்து தேர்ந்து பண்ணும்