உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

1903ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களிலே தொடங்கப் பெற்ற உரை 1905 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் வரை மூன்று பகுதியளவுடன் நின்றது. ஏன்? படுக்கையில் கிடத்திய கொடு நோய்! படைகளைப் போல வரிசை வரிசையாக வந்து தாக்கிக் கொண்டிருந்த வறுமைப் போர்! - இவை போதாவா? போதாவென்று, புலவர்கள் செய்த கொடுந்துயரைக் கேட்போம்.

உரை

இங்ஙனம் எழுதி வருகின்ற காலை நண்பர் சிலர் என்மருங்கு உற்று, முன் உரை இருப்பப் புதியதாகிய நின் உரை உலகங் கொள்ளாது,. ஆகலின் இம் முயற்சி கைவிடுக எனக் கூறினாரும் உளர். முன் உரையாகிய இளம்பூரணம் இருப்பப் பின்னரும் பலர் செயற்குக் காரணம் என்னை எனவும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவெனப்பொதுமறை கூறிற்று அன்றி முன் உளதாயின் கொள்ளுக, பின்னுளதாயின் தள்ளுக என்று கூறிற்று இன்றே எனவும் அதனால் உலகம் முன் எனப் பின் என எண்ணாது முதனூற் கருத்தொடு முரணாகா வழிக் கொள்ளும், முரணாய வழித் தள்ளும் எனவும் அவர்க்கு இறுத்து அவர் உடன்பாடும் பெற்றேன்."

"அவருள் இலக்கணம் என்று பெயருங் கேட்டு அறியாதார் சிலர், எமக்குக் காட்டி நன்றென யாங் கொண்ட பின்னரே எழுதல் வேண்டும்' என யான் கண்ணீர்விட்டு அழுதல் செய்யுமாறு துன்புறுத்தி னாரும் உளர். அந்தோ! அவர்கட்கு எவ்வாறு உணர்த்தல் கூடும்? உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தேயன்றோ? அம்மட்டோடு ஒழியாமல் அவர் பின்னுஞ் செற்றங் கொண்டு நிந்தை பல கூறி இன்னுந் தீங்கிழைப்பான் எண்ணித் திரிகின்றனர். நன்றல்ல தன்றே மறப்பது நன்றாகலின் யான் அவர் பெயரை யாண்டும் உரையேன். அதுவும் ஒரு நன்மை என்று கண்டே அவரையும் உதவி செய்தாராகவே மனத்துட் கொண்டேன்'

சண்முகனார்க்குத் தமிழறிஞர் தொல்லை எல்லை இன்றிப் பெருகிய இவ்வமயத்தே நோய்த்தொல்லையும் முதிர்ந்து எழுந்தது. ஐயோ! கொடுமை! தம் நிலையை நெஞ்சந் துடிக்க நெட்டுயிர்ப்பு வாங்க - அவரே எழுதுகின்றார்:

-