உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

163

திருமுறை கண்டபுராணம் நுண்ணிய உண்மையா ராய்ச்சியில் தலை நின்றவரும் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணுமுறைக்கண் நின்றவருமான உமாபதி சிவாசிரியர் செய்தது ஆகாது. அவர் பெயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும் (818)

வீரசைவம் :

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுக நாட்டில் இருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீர சைவ மரபினர் பலருள் பாண்டிய நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகர் தோன்றினமையால் போலும் அவரை வீர சைவச் சான்றோர் முதலாசிரயராய்க் கொண்டு வழிபாடு செய்து வருவாராயினர். அதனால் சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக் கூறாது பொய்யடிமை இல்லாத புலவர் எனச் சிறிது மறைத்துக் குறிப்பால் கூறினார். வீர சைவமும் சைவரும் ஒரு சமயமே என உண்மை கண்டு உறவு கலந்தபின் மாணிக்கவாசகரையும் நாலாம் சைவ சமயாசிரியராக ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினர் (821-22) திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலே தான் முதன்முதலில் மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவரோடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக் கின்றார்.

“வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்'

""

என்று பட்டினத்தார் கூறுவதால் அவர் காலத்திற்கு முன், முதல் மூவருமே சைவ சமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனர் என்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகர் நாலாம் வராக வைக்கப்பட்டார் என்பதும் விளங்கும், (823-4)

ஆரிய நூல் வைப்பு முறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ் வேதங் களாகவும், திருவாசகந்திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங்களாகவும், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற் குப்பின் ஒன்றாக வைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின (860). அவர் வட நாட்டின்கண் இருந்து வந்த மரபினர் என்பது” மகேந்திரம்' என்பதைப் பயில வழங்க லாலும் சில சொல்லாட்சி களாலும் விளங்கும் (861-862)