உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம்

22

தண்டலம் பாலுசுந்தர முதலியார் தெரு, 26 முல்லா சாய்பு தெரு, 197, இலிங்கிச் செட்டித் தெரு, 62, அரண்மனைக்காரன் தெரு ஆகிய ஐந்திடங்களில் குடியிருந்தார்.

கற்பிக்கும் திறம் :

அடிகளார் பாடம் கற்பிக்கும் திறம் குறித்து மறை திருநாவுக்கரசு வரைகின்றார் :

66

"அடிகள் கற்பிப்பு மிகவும் தெளிவாய் விரைந்தும் மெதுவுமான போக்கில் இல்லாமல் அளவான போக்கில் செல்லும்; விரைந்து பேசார்; இரைந்து ஒலியார்; பேச்சில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் கலந்தொலிக்கும்; விளக்க உரைகள் கண்ணாடியில் காணும் உருவம்போலத் தெளிவாய் இருக்கும்; அறிவு செறிந்திருக்கும்; இடை இடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோளும் உண்டு; பண்டை நூல்களின் மேற்கோள் உண்டு; சீரிய ஆராய்ச்சிகளும் கூரிய நோக்குகளும் உண்டு. சுருங்கச் சொன்னால் அடிகள் ஆசிரிய இயலின் உருவம் அனையார் என்று தான் கூறவேண்டும்" என்பது அது. (மறைமலையடிகள் வரலாறு 24)

மாணவர்கள் :

.

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு. செங்கல்வராயர், திருப்புகழ்மணி டி.எம். கிருட்டிணசாமி, அமைச்சர் பி.சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டிணர், இரசிகமணி டி.கே. சிதம்பர நாதர், பேராசிரியர் ச.வையாபுரியார். சி.என்.முத்துரங்கர், எசு. அனவரதவிநாயகர், சி.டி. நாயகம், கோவை இராமலிங்கம் ஆகியோர் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் ஆவர். இவர்களுள் சுப்பராயனும், முத்துரங்கரும் அடிகளாரிடம் சில ஆண்டுகள் தனிப் பாடமும் பயின்றவர் ஆவர். சிலச்சில நூல்களை மட்டும் பாடம் தனியே கேட்டுச் சென்றவரும், சில ஐயங்களை மட்டும் கேட்டுச் சென்றவரும் மிகப்பலர்.

ஆய்வு நூல் :

கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் பழந்தமிழ் நூல்களும் இடம் பெற்றிருந்தன. அவ் வகையில் முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்பவை குறிப்பிடத்தக்கவை இப் பாடம் பற்றியும், உரைவந்த வகைபற்றியும், வெளியீடுபற்றியும் அடிகளார் முல்லைப்பாட்டு ஆய்வுரை மூன்றாம் பதிப்பு முகவுரையில்