உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம் 228

"இன்று சென்னைக்குச் சென்று நூற்பதிப்புக்கான பொருள்களை வாங்கிவிடட்டுமா?"

66

'மாணிக்கம் புத்தகம் வாங்க எட்டணாக் கேட்கிறான் கொடுக்கட்டுமா?

"நீலா நன்றாகப் படிக்கிறாள்."

"சம்பந்தனைப் அனுப்பட்டுமா?"

பண்டங்கள் வாங்கக் கடைக்கு

திருநாவுக்குத் தமிழ் மருந்து கொடுக்கட்டுமா? இங்கிலீசு மருந்து கொடுக்கட்டுமா? வெந்நீர் கொண்டு வா."

"நான் தஞ்சாவூர் சென்றபோது உமாமகேசுவரம் பிள்ளை நிரம்ப அன்பும் சிறப்பும் செய்தார். பிள்ளா அவர் வந்துள்ளார். அருமையான விருந்து செய்.

"இளவழகன் நுட்பமான அறிவாளி. நான் சொல்வதை யெல்லாம் நன்றாக விரைவில் தெரிந்து கொள்கிறான்.” "எம்.எல்.பிள்ளை சட்டக்கல்லூரிப் பேராசிரியராய் விட்டார்."

"கவியாண சுந்தரம் (திரு.வி.க.) நாளை வருவார்.

"கீதம் இனிய குயிலே என்னும் திரவாசகம் மிகவும் அழகானது.

""

இப்படியெல்லாம்

எழுதப்

படிக்கத்தெரியாத

சாந்தம்மாளிடம் அடிகள் பேசிக்கொண்டிருப்பார். தம் கணவர்தாம் அவருக்குத் தெய்வம். அந்தப் பேரறிஞர் இந்த எழுத்தறிவில்லாப் புலவரிடத்தில் அறிவுரைகள் கேட்பது பார்ப்பவருக்கு மிக வேடிக்கையாகத் தோன்றும்.

சாந்தம்மா உடன்பாடின்றி அடிகள் மாளிகையைக் கடவார். ஒருவருக்கும் கடிதம் எழுதார். கொடுக்கல் வாங்கல் செய்யார். வெளியூர் அழைப்புகளை ஏலார் சவுந்திரம் வேண்டாம் என்றால் கோடியாயினும் விரும்பார். அடிகள்பால் சில வியப்பான போக்குகள் உண்டு. அவற்றிற் சில தப்பாகவோ சரியாகவோ சாந்தம்மாள் சொல்வதை மீறாமை, அவ்வப்போது நூல்கள் விற்றுப்பணம் அனுப்பில், வரும் தொகைகளைச் சவுந்திரம் கையில் கொடுத்துப்பின் தாம் வாங்குதல்; எந்தச் சிறு செயல்களையும் சவுந்திரத்தைக் கேட்டே செய்தல் முதலியவாம் என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு 72-74)