உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

59

யொருவர் இன்றியமையாக் காதல் அன்பில் தலைப்பிரியா வாழ்க்கையினில் நீவிர் நீடுவாழுமாறு அருள் புரிந்த அம்மையப்பர்தம் பேரிரக்த்திற்கு ஏழையேம் எங்ஙனம் கைம்மாறு செலுத்தவல்லேம். அவ்வருட் பெருந்திறத்தை எங்ஙனம் ஏத்திப் புகழவல்லேம். காதல் அன்பின்கண் ஈடுபட்ட நும் இல்லற இன்ப வாழ்க்கை அம்மையப்பர் தம் அருள் வாழ்க்கையில் வேறாகுவது அன்றாகலின் இவ் வாழ்க்கையிலேயே நும் வாழ்நாள் எல்லா நலங்களிலும் இனிது நீடுக என்று எம்பெருமான் பெருமாட்டியின் இணைமலர்த் திருவடிகளை இறைஞ்சி வேண்டுகின்றேம்.

எம்முடைய வாழ்க்கையினும் யாம் ஈன்ற எம் மக்களின் இல்வற வாழ்க்கை முற்றும் அன்பிற் பிரிதல் இல்லர் இன்பச் சுற்றத்தவரோடு இனிது நடைபெறுக என்று யாம் வேண்டிய வேண்டுகோள் உரையினை எம் இறைவன் திருச்செவி பெற்று நீலாள். கணவனுடன் அவள்தன் அருமை அத்தையாரும், அருமை மைத்துனரும், ஏவலாளரும், ஏவலாட்டியும் பிறரும் எல்லாம் அன்பிற்கெழுவிய நன்பெரு மாட்சியினை அருள் செய்தான்! அவ்வருளுக்கு எளியரேம் எழுமை எழு பிறப்பும் உழுவற்றொழும்பு ஆற்றுவதல்லது வேறென் கடவேம்!

தன் மனக்கினிய காதலன்பாள் நீலாளை ஒப்படைத்து விட்டபின் யான் கவலையுறுதற்கு இடனில்லையாயினும், அவட்கு வந்த நோய் இனி வாராதென்னும் உறுதிப்பாடு பெற்ற பின்னரே என்னுள்ளம் அமைதி பெறும். நெடுந்தொலைவில் இருப்பதனாலும் அடுத்தடுத்துக் காணுதற்கு இல்லாமையாலும் அருமை மகளை நினைத்து நெஞ்சம் நிலைகலங்குகின்றது. எமது கலக்கத்தை நன்கறியும் இறைவனே, அவட்கு இனி அந்நோய் வராமல் அருள் செய்து எமது பெருங்கவலையைத் தீர்க்கற்பாலான்.

நீலா, தலைமுழுகும் நாள்களில், உடைத்து விதை அகற்றிய நான்கு கடுக்காய், ஏழு கசப்பில்லாத வாதுமைப் பருப்புகளின் எடையுள்ள மிளகு, இம்மிளகின் எடையில் எடையில் அரைவாசி கொண்ட ஓமம் என்னும் இவற்றை நெகிழ அரைத்து வடிகஞ்சியிற் குழப்பி, இறுகக் காய்ச்சி, சூட்டோடு அதனைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்துக் கொண்டு அளவான வெந்நீரில் முடிக்காய் சவற்காரத்தால் நெய்ச்சிக்கும் அழுக்கும் போக முழுகுதல் வேண்டும்.