உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

தேனும் இந்துப்புப் பொடி சிறிதும் கலந்த இஞ்சிச் சாற்றை அகமும் புறமும் தூயவாய்ப் பளபளப்பாக்கிய குடகு நாரத்தை நிறக் கண்ணாடிப் புட்டிலிலும் ஆழ்ந்த நீலக் கண்ணாடிப் புட்டிலிலும் அடைப்பித்து, வெயிலில் நாள் முழுதும் வைத்தபடியாகவே அதனை உட்கொண்டு வரல் வேண்டும். நோய் மிகுந்தில்லா நாள்களில் மூன்று மணி நேரத்திற்கு ஒருகால் குடகு நாரத்தை நிறப்புட்டிலின் சாற்றையும் இடையே ஒன்றல்லது இரண்டு முறை ஆழ்ந்த நீலப்புடிலின் சாற்றையும் மாற்றி மாற்றிக் காற்பலம் பருகிவரல் வேண்டும். தலை முழுகிய மறு நாளில் ஐந்து விதை நீக்கிய கடுக்காய்ச்சாறு அருந்திமலக்குடரைத் துப்புரவு செய்க. உடம்பு இடுங்கச்சுகள் முழங்கைக்கு மேல் நீளமாய் இறுகப்பிடித்திருத்தல் வேண்டும். குளிர்ச்சி மிகுந்த பண்டங்களை உட்கொள்ளல் வேண்டாம்.

நலம். அன்புமிக்க, மறைமலையடிகள்.

அடிகள், அடிகளாய், தாயாய் தந்தையாய் குருவாய் மருத்துவராய் பல்லுருக்காட்டி நிற்கும் பாங்கு இக் கடிதம் ஒன்றால் வெளிப்பட விளங்குமே!

அடிகளார் எத்தனை எத்தனை தலைப்புகளில் எங்கெங்கெல்லாம் பொழிந்தார்! எவ்வெவ்வூர்களுக்கு எல்லாம் சென்றார்! எவ்வெவரோடும் எல்லாம் தொடர்பாளராய்த் துலங்கினார்! எவர்க்கெல்லாம் வழிகாட்டியாய் இலங்கினார்! எத்தகைய பல்கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்! எத்தனை துறைகளைப் புதுக்கினார்! இவற்றைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பெரு நூலாதல் ஒருதலை. அவர் நடாத்திய பொதுநிலைக்கழக இருபதாம் ஆண்டு விழா ஒன்றைமட்டும் சுட்டி அமைவாம்.

அடிகள் தம் வருவாய் கொண்டு அரிதில் தேடித் தொகுத்த நூல்கள் நாலாயிரம் ஆகும் அவை, தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி சார்ந்த நூல்களாம். அந்நூல்களை நூலகமாக அமைத்து 'மணிமொழி நூல் நிலையம்' எனப் பெயரிட விரும்பினார்.

பொதுநிலைக் கழக விழா :

பொதுநிலைக் கழக மாளிகையின்மேல் இறைவழிபாட்டுக் கென அம்பலவாணர் திருக்கோயில் ஒன்றும் அமைத்தார்.