100
பேராசிரியர்
இளங்குமரனார் தமிழ் வளம் - 23
தினவ. சொக்கப்பனார்
தலைமையில் வரலாற்றரங்கும் நிகழ்ந்தன. பாவலர்களும் அறிஞர்களும் பதினைவர்க்கு மேல் பங்கு கொண்டனர். 'தமிழ் என் உயிர்' என்னும் நாடகம் விழா நிறைவில் நிகழ்ந்தது. புலவர் இறைக் குருவனார் நன்றியுரைத்தார். இதனைப் பற்றிய விரிவான செய்திகளும் ஆய்வுக் கருத்துகளும் முதன் மொழி, தென்மொழி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. மிக மேம்படவும் எழுச்சி மிகவும் கட்டுக் கோப்புடனும் நிகழ வேண்டிய மாநாடு ஓராற்றான் நிகழ்ந்த தென்றே மதிப்பீட்டாளரும் பார்வையாளரும் ஒருங்கு கருதினர். அந்நிலையை மாற்றியமைக்க எண்ணிய பாவாணர் உ. த. க. உறுப்பினர் களுக்கும் உ.த.க. கிகளைகளுக்கும் அறிக்கைகள் சில விடுத்தார். இவற்றை முதன்மொழியில் கண்டு கொள்க. பின்னே வரும் அறிவிப்பு அறை கூவலும் என்னும் பகுதியில் அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
டு
மூன்றாம் மாநாடு மாந்தன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடாகத் தஞ்சையில்நிகழ்ந்தது (இதன் விளக்கம் அறிவிப்பு அறைகூவலும் என்னும் பகுதியில் காண்க)
(1978)
நான்காம் மாநாடு சென்னை பெரியார் திடலில் நிகழ்ந்தது
இவ்விடத்தில் உ.த.க. பற்றிய பாவாணர் கருத்துகள் சில குறிப்பிடத் தக்கனவாம் :
(C
தென்னிந்தியா முழுவதும் உ.த.க. கிளைகளைத்
தோற்றுவிக்க வேண்டும்"
"மொழிவகையாலன்றி
வேறொன்றிலும்
நான்
தலையிடேன்”
"ஆட்சியைக்
வளர்க்கவோ
கைப்பற்றாமல் நாம் தனித்தமிழை
சிதறிக்
வடமொழியினின்று தமிழை மீட்கவோசின்ன பின்னமாகச்
கிடக்கும் தமிழினத்தை மீண்டும் ஒன்றுசேர்த்து முன்னேற்றவோ
முடியவே முடியாது"
"தமிழ்நாட்டுப் பிரிவினை உத.க. கொள்கையன்று; என்பவை சில. தென்மொழி உ.த.க. இதழாயிருந்தது; பின்னர் முதன்