உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மானியம்

சென்னையில் சூழ்நிலத்தொடு கூடிய மாளிகை யொன்றும் ஐத்திலக்கம் உருபாவும்.

கடவை (Course)

இலக்கணம், இலக்கியம், மொழிநூல், ஏரணம் (Logic), இசை, நாடகம் என்னும் ஆறும் ஐந்தாண்டு கற்பிக்கப்பெறும். பின் மூன்றும் தமிழிலேயே நடைபெறும்.

பாடத்திட்டம் பின்னர் வகுக்கப்பெறும்.

பயன்

தமிழ்வடமொழியினின்று மீட்கப்பெற்றுத் தூய நடையில் கற்பிக்கவும் உலக முழுதும் பரப்பவும் பெறும்.

தமிழரும்திரவிடரும் ஆரிய அடிமைத்தனம் அடியோடு நீக்கி முன்னேற்றப் பாதையில் அடியிட்டு விரைந்து நடப்பர்.

ஐயாட்டைக் கடவை முடித்துப் பட்டம் பெற்ற மாணவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மொழியாசிரியரும் மொழி நூலாசிரியரும் இசையாசிரியரும் நாடகவாசிரியருமாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறுவர்.

அன்பன்

ஞா. தேவநேயன்

குறிப்பு : திருவள்ளுவராண்டு 2000 ஆடவை 13-ஆம் பக்கல் (25-6-69) அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு. மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு. அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.

தென்மொழி 7:10,11. பக். 22-24.