உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

3

செலவை எழுதிப்பேணலும் பொருளாளர் பொறுப்புக்கள் ஆகும். பதிப்பகத்தின் பெயரால் தொடங்கப் பெறும் வைப்பகக் கணக்கை (Bank a/c) ஆளும் உரிமை இவர்க்குண்டு. பதிப்பகத்தின் பொருளாளராகத் திரு.சு.முகில்வண்ணன் அமர்த்தப் பெற்றுள்ளார்.

பொருளாளர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராய்க் காணப்படினும், வேறொரு பொருளாளரை அறிவுரைக்குழுவின் அறிவுரையுடன் பதிப்பாசிரியர் அமர்த்திக் கொள்ளலாம்.

புரவலர்:

தமிழ்த் தொண்டு கருதியும், பாவாணர் கொள்கைப் பரப்புக் கருதியும் பாவாணர் பதிப்பகத்திற்கு உருபா 1000/- நன்கொடை வழங்குவார், அவ்வமைப்பின் புரவலர் ஆவர். பதிப்பகம் வெளியிடும் நூல்களில் இரண்டு படிகள் புரவலர்க்குக் கையுறையாக அனுப்பப் பெறும். பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்தும் புரவலர் கூறும் கருத்துக்கள் முன்னுரிமையுடன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெறும்.

உறுப்பினர்:

பதிப்பகத்தின் நூல் வெடியீட்டிற்கான முதல்வைப்பிற்குக் குறைந்த அளவில் உருபா நூறு நன்கொடையாய் வழங்குவோர் பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினராகப் பதிவு செய்யப் பெறுவர். வணிகமும் ஊதியமும் கருதாத் தமிழ்த் தொண்டாதலின் உறுப்பினர்க்கு வட்டித் தொகையோ ஊதியப் பங்கோ அளிக்கப் படமாட்டாது. ஆயின் அச்சாகும் நூலில் ஒருபடி அன்பளிப்பாக வழங்கப்பெறும். ஆண்டுதோறும் வரவு செலவு அறிக்கையும் உறுப்பினர்க்கு அனுப்பி வைக்கப்பெறும். பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்து உறுப்பினர் தம் கருத்துக்களைப் பதிப்பாசிரியருக்கோ அறிவுரைக் குழுவினருக்கோ தெரிவிக் கலாம்.

விற்பனைக்குழு :

தமிழகத்தின் மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பின்கண்ட அக்குத்து (நிபந்தனை)களுக்கு உட்படும் விற்பனைக் குழு உறுப்பினர் அமர்த்தப் பெறலாம். 1. விற்பனைக்குழு உறுப்பினர் பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினராயிருத்தல் வேண்டும்.