உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

3.

4.

4

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வெளியாகும் நூல்களில் குறைந்த அளவில் 50 படிகள் விற்பனை செய்தல் வேண்டும்.

நூல் வெளியாகும் நாள், விலை முதலிய செய்திகள் பதிப்பாசிரியர் அறிவித்தவுடன் தமக்கு வேண்டிய நூற் படிகளைத் தெரிவிப்பதுடன், அவற்றின் விலை மதிப்பில் காற்பங்குத் தொகையைப் பொருளாளர்க்கு முன்பணமாகச் செலுத்திவிடுதல் வேண்டும்.நூற் படிகளைப் பெற்றுக் கொண்ட மூன்று திங்களில் அவற்றிற்கான முழுத் தொகையையும் செலுத்திவிடுதல் வேண்டும்.

விற்பனைக் குழுவினர்க்கு 20 விழுக்காடு கழிவு தரப்படும். பொதுவான பிற :

1)

2)

3)

உறுப்பினர் / புரவலர் அன்பளிப்புத் தொகையைக் குறுக்கைக்கணக்குக் காசோலை / வரைவோலையாக (Crossed Cheque / Draft)Treasurer, Paavaanar Pathippagam என்னும் பெயருக்கு வழங்கலாம்.

ஆண்டுதோறும் குறைந்த அளவில் இருநூல்களும் பதிப்பகத்தின் உறுப்பினர் தொகையும் விற்பனையும் ஊதியமும் பெருகப் பெருகப் பல நூல்களும் வெளியிடப் பெறும்.

பாவாணர் பதிப்பகம் செயல்பட முடியாது முடங்கிப் போகும் நிலை உருவாகுமாயின் செலவுபோக எஞ்சியுள்ள தொகை விழுக்காட்டளவில் பகிர்ந்து புரவலர்க்கும் உறுப்பினர்க்கும் திருப்பியளிக்கப் பெறும்.