218
இளங்குமரனார் தமிழ் வளம் - 23
பசையும் உருகி நெய்யாகிச் - செம்
பாலும் கவர்ந்து வளியாகிப்
பெரும்பிரிவும் பேரிரங்கலும்
பிசையும் நெஞ்சக் குலைவெடித்துச் - சாப்
பேய்க்குக் களமாய்ப்போயினவே
வசையில் இசைசேர் பாவாண - நீ
வானம் புகுந்த போழ்தினிலே!
நிலமும் வெந்து நீறாகி - மண் நீரும் கொதித்து வளியாகிப் பொலமொண் தீயும் புகையாகி - வான் போழும் வளியும் வெளியாகிப் புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம் பூதத் தூழி ஆர்த்ததுவே அலமார் நெஞ்சில் பாவாண - நீ
ஆக்கை கழன்ற போதினிலே!
தமிழே தொகைந்து கருவாகித் - தீந்
தமிழே புகுந்துள்ளுயிர்ப்பாகித்
தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த்
தமிழே உருவாய் உலாவந்து தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின்
தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம் தமிழாய் வாழ்ந்த பாவாண் - நீ தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே! ஒளிசேர் விழியும் சுடர்நுதலும்- நல்
உரஞ்சேர் நெஞ்சும் தமிழ்நினைவும்
வளிவார் முடியும் நரைதலையும் - உயர் வல்லென் மூளைக் கொழுந்திரளும் அளிசேர் தமிழ்தோய் ஆருயிரும் - ஓர்
அணுவாய் அணுவாய் உட்கரைந்தே
வெளிசேர்ந் தனவோ பாவாண - நீ விண்ணில் ஏறிய போழ்தினிலே!
சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர் சோரா துயர்த்துந் தெள்ளறிவும்