பாவாணர்
காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க் கதையாய்ச் சொன்னாய்; கதைநிறுத்திப் பாலை நடுவில் எனைவிடுத்தாய் - உள் பதைப்புற் றுயிரும் சிதைந்ததுவே வாலை அறிவுப் பாவாண் - நீ
வாழ்க்கை துறந்த போழ்தினிலே!
பொன்னார் மாடத் திருக்கோயில் - நின்
புலனால் சமைத்துத் தமிழணங்கை மின்னேர் இறைமைத் திருவுருவாய் - ஒளி மிளிரச் செய்தே வழிபட்டாய்! உன்னோர் அழுங்க ஊரழுங்க - என்
உயிரும் உடலும் ஒருங்கழுத
என்னேர் ஆவிப் பாவாண - நீ
எனையே தவிர்ந்த போழ்தினிலே!
உலவல் மறந்தாய் ஊண்மறந்தாய் - உன்
உறவே வாழ்வென் றுவந்ததுணைக் குலவல் மறந்தாய் குளிமறந்தாய் - புதுக் கூறை வாங்கும் நிலைமறந்தாய்! கலவல் தமிழ்க்கே தனித்தமிழ்காண் - ஒளி
காழ்க்கும் நினைவின் பாவாண! பலவல் லின்பம் மறந்தாயே - நீ
பாயல் மறந்த போழ்தினிலே!
வேட்கும் தமிழே விளைவாகிச் - சொல்
விளைக்கும் தொழிலே வாழ்வாகித் தோட்கும் துண்டைப் போர்த்தாமல் - ஒரு
துறவியைப் போலும் மனங்கொண்டே
நாட்கும் மணிக்கும் உழைப்பெடுத்தாய் - யாம்
நலிந்தோம் மெலிந்தோம் செந்தமிழை
மீட்கும் முயல்வில் பாவாண - நீ
மீளாத் துயில்காண் போழ்தினிலே.
—
219
தென்மொழி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
நினைவிதழ். 17:6-7;