1. மும்மதிப்பீடுகள்
"ஓராயிரம் ஆண்டுகள் ஒய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி" - பாவாணர்!
(C
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி"
பாவாணர்!
இஃது, "உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை”
இதனை, "வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்" என்றும், "செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே" என்றும் வரூஉம் கழகச் சான்றோர் காட்சி யுரைகளைக் காட்டாக்கிக் கூறுவேன்.
பாவாணர், தமிழ்மொழியின் தனி ஒளியைப் பாருக்குப் பாரிக்கவென்றே பிறந்த, எழுசுடர் ஞாயிறு!
மேலையாரிய மொழிகள், கீழையாரிய மொழிகள், திரவிட மொழிகள் இன்னவற்றையெல்லாம் விரல் நுனியிலே வைத்திருப் பார்போல், சொற்பிறப்பியல் விரிக்க வந்த விரகர்!
எத்துணை எதிர்ப்புகளுக்கும், ஈடழிக்கும் தடைகளுக்கும், இன்னாங்கு எழுந்த இடர்களுக்கும், தலை தாழ்த்தாது மலையென நிமிர்ந்து நின்று, ஆக்கப்பணிகள் புரிந்த அரிமா!
வாட்டும் வறுமையையும் தேட்டெனக் கொண்டு, திறமான பணிபுரிந்த வாட்டருஞ்சீர் வண்டமிழ்த் தொண்டர்!
அன்னார் இழப்பு ஒன்றே மொழித்துறைக்கு உண்மையாகவே ஈடுசெய்ய இயலாத இழப்பு!
வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால் மொழிவது!
பாவாணர் பாவலர்; நற்றமிழ் நாவலர்; இலக்கியச் செல்வர்; இலக்கண வித்தகர்; உரைவேந்தர்; கட்டுரை வன்மையர்; நகைச்சுவை மிளிர உரையாடும் நயத்தர்; நினைவின் ஏந்தல்; நுண்மாண் நுழைபுல எழிலர்; நுணங்கிய கேள்வியர்; நுண்ணிய