உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

முதல் நாட்காலை,

தலைவர்

திறப்பாளர்

கொடியேற்றுபவர் வரவேற்புத் தலைவர் ஆகிய நால்வரின் சொற்பொழிவுகளும், மாலை தீர்மானங்களும் தமிழ்ப் புலவர் கழக உட்கழக அமைப்புகளும், மறுநாட்காலை தொல்காப்பிய மாநாடும் நடைபெறும்.

தொல்காப்பிய மாநாட்டில் காலை மூவேறு புலவர்கள் எழுத்து சொல்பொருள் பற்றிய சொற்பொழிவும் நடைபெறும். இதற்குத் தலைவராயிருக்கச் சோமசுந்தர பாரதியாரைக் கேட்கப் போகின்றோம். தொல்காப்பிய மாநாட்டைக் குறுந்தொகை, கலித்தொகை மாநாடு போல நீங்களே பொறுப்பேற்று நடத்தலாம். முன்னதாகச் சொற்பொழிவுகளை அச்சிட்டும் கொள்ளலாம். தொல்காப்பியம் தமிழ்ச் சரித்திரத்திற்கு உயிர்நாடியாய் இருப்பதாலும், தமிழ்ப் பகைவரான பார்ப்பனர் சில முக்கியமான நூற்பாக்களுக்குத் தவறான உரை கூறுவதாலும் தொல்காப்பியக் காலம்கருத்து முதலியவை இவையே என்று நிறுவ வேண்டும்.

இருநாளும் புலவர்களுக்கெல்லாம் இலவச ஊணும் இடமும் அளிக்கப்படும். அண்மையில் விளம்பரம் மாநாட்டழைப்பு வேண்டுகோள் நிகழ்ச்சிக்குறிப்பு முதலியவை அச்சிட்டனுப்பப் பெறும். இம்மாதச் செல்வியில் 3பக்கம் இடம் விட்டுவைக்க.

நாம் தனித்தனி ஆங்காங்கு எத்தனை கூட்டம் கூட்டினும் அத்துணை வலியுறுவன அல்ல. புலவரெல்லாரையும் ஒன்று சேர்த்துத்தொகுதியாக நின்று போராடுதலே வலியுடைத்து. சென்னையிலுள்ள எல்லாப் புலவர்க்கும் இதைப்பற்றித்தெரிவித்துப் பற்றுள்ள வரையெல்லாம் நீங்கள் அழைத்துக் கொண்டு வரவேண்டும். இதுபொதுத் தொண்டென்றும் புலவரையெல்லாம் ஏற்றத் தாழ்வுணர்ச்சியின்றி உடன் பிறந்தாரும் ஒருநிலையருமாய்த் தத்தம் பணிசெய்ய வேண்டியது கடமை யென்றும் அவர்க்கு உணர்த்தல் வேண்டும்.

மறைமலையடிகளைத் திறப்பாளராக்கி ஐம்பது ரூபா கொடுப்பதற்கு இருந்தோம். அவர் 250 ரூபா வுக்குக் குறைந்துவர முடியாதென்று எழுதி விட்டார். மாநாடு மிகமிகமுக்கியமானது. தமிழ்த்தடைகளை யெல்லாம்சல்லி சல்லியாகத் தகர்த்தெறிய வேண்டும் என்பது எங்கள் அவா.

தமிழன் எப்படிக் கெட்டான்?