உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

59

அந்நாளிலே, தமிழ்ப் புலவர்களிடையேயும் மறைமலையடிகள் மாறு கொள எண்ணப்பட்டமையும், மறக்கப்பட்டமையும் பாவாணரை வதைத்தன. அதனால் அடிகள் தமிழ்ப் புலவரிடையும் சு.ம. பண்டிதரானார். இத்துணை அண்மைக் காலத்திலேயே அவர் மறக்கப்படுவார் அல்லது புறக்கணிக்கப்படுவார் என்று கனவிலும் கருதவில்லை. மலைசாய்ந்ததென்று புகழ்ந்தவரெல்லாம் அலை யோய்ந்த தென்று மகிழ்கின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமைதாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலுமில்லை. தக்காரொருவர் தலை யெடுக்காவிடின் தமிழ்நாடு அமிழ்நாடே என் அலமருகிறார்.15-

7-57.வ.சு.)

மொழிப்போரில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிறரும் உளர். நாட்டு எல்லைப் போரில் ஈடுபட்டவர் அரியர். எல்லை மாநாட்டைக் கூட்டவும் பாராளுமன்றத் தூதுக்குழுவைச் சந்திக்கவும் தூண்டுகிறார் பாவாணர்:

"இற்றைச் செய்திகளையும் நிலைகளையும் நோக்கும் போது இம்மாத இறுதிக்குள்ளேயே எல்லை மாநாட்டை வைத்துக் கொள்வது நலமென்று தோன்றுகின்றது. பாராளுமன்றத் தூதுக்குழு 14ம் தேதி வரை லாகூரில் இருக்கிறது. பின்பு இரு பகுதிகளாய்ப் பிரிந்து பெஷாவருக்கும் அமிருதசாருக்கும் செல்கிறது. வடக்கேயே இத்துணை நாள் தங்கினால் தெற்கே பம்பாய் பார்க்கவும் திருவாங்கூர் செல்லவும் சென்னை வரவும் இம் மாத இறுதியாகிவிடும். பெப்ரவரித் தொடக்கத்தில் நடக்கும் கூட்டத்தை இம்மாத இறுதியில் வைத்துக் கொள்வது இயலாத தன்று. பா.தூ. குழு அதிகார முறையில் வராவிட்டாலும் இந்தியாவின் பின்னிலை அமைப்பிற்குப் பெரிதும் காரணமா யிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. தூதுக்குழு சென்னைக்கு வரும்போது அவர்கள் கண்ணாரக் காண்பது போல, பின்னர் நடக்கும் எம்முயற்சியும் வலியுறாது என்பது தேற்றம்.

"குழு டில்லிக்குத் திருப்பியவுடன் ஆந்திர மகாசபைத் தலைவராய் விஜயா என்பவர் காணச் செல்கிறார். நாம் இன்று தூங்கிக் கொண்டும் நீட்டிக் கொண்டும் இருந்தோமாயின் நம் காரியம் கைகூடுவது அரிது. மாநாட்டிற்கு வேண்டியவை முன்னர்ச் சுவடியும் பின்னர் 1 புத்தகமுமாக 2. சுவடியில் வேங்கட