பாவாணர்
71
முகவரியில்,ருந்து எவ்வளவு மகிழ்வோடு வரைந்துள்ளார் பாவாணர்! அவர்தம் மீட்சி எத்தகைய தாயிற்று! இசைப்பாட்டும் இசைக்கிறார்;
என் அண்ணாமலை நகர் வாழ்க்கை எனத் தொடர் கட்டுரை வரைந்த பாவாணர், இசைத் தமிழ்க் கலம் பகத்தில் 'என் அண்ணமலைப் பல்கலைக் கழகப் பணி என்னும் பாடலில் அதனைத் திரட்டுப் பொருளாய்த் தருகின்றார்':
'புள்ளிக் கலாபமயிற் பாகன்' என்ற மெட்டு
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - என்றும் அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே
ஆரியம் வேரூன்றித் தமிழ்
சீரழிந்து போனதாரே கண்டார் - வெளிவிண்டார்,
திரவிட மொழியியல் துறையே - அங்குத்
திறந்தது வெள்ளிவிழா முறையே - தமிழ்
வேர்ச் சொல்வரிசை முதலே
சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார் - தாளிற் பெய்தார்.
தமிழுக்கு வந்தது நற்காலம் - என்று
தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த்
தலைமையிருந்தவர் அந்
நிலை யறிந்து வழி சூழ்ந்தார்- தமிழ்கீழ்ந்தார்
சட்டர்சி யென்னும் வங்காளியரே - அன்று சமைந்த குழுவில்மாபெரியரே - தமிழ்ச்
சார்புகொண்டென் வேலையைமேற்
பார்வை செய்ய வந்ததலங் கோலம்- கெடுகாலம்
தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் - அவர் தமிழ்ச் சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் - அது
தவறென்று விளக்கவும்
கவனியா திழுக்கென மறுத்தார் - மிக வெறுத்தார்
எதிரிகள் இதே யெதிர்பார்த்தார் - என்னை ஏனைத் துறைக்குத்தள்ளித்தீர்த்தார் - அங்கே