இரங்கற் பாக்கள்
தமிழந் தணன்பெற்ற தையலாள் கேள்வ! தமிழர் குடியின் தவமே! - தமிழர்
பணிக்கோர் தனியிருப்புத் தூணே! பழியேம் பணிக்குற்ற தின்று பழுது.
எந்தையே எந்தாய்த் தமிழ்ப்பணிக் கென்றுதன் சிந்தையே தான்கொடுத்த செல்வனே! - நிந்தையே கொண்டும் தமிழ்ப்பணியிற் குன்றாத கோமானே! என்றுனைக் காண்பம் இனி?
கழகங்கள் பற்பலவாம்; காணில் எமக்கே
கழகம் எனவொன்று காட்டிப் - பழகும்
தமிழோசை எங்கும் தழைப்பித்த சான்றோய்! தமிழுலகு நீத்த தெவன்?
தேவார மெல்லாம் தெருப்பாட் டிசையன்றென்(று)
ஓவா துரைத்தார் உரையெல்லாம்
―
ஓவாத
தன்பணியால் மாற்றும் தகையோய் உனையன்றி என்பணி இந்நாட் டினி?
தனித்தமிழ் வாழ்வின் தவமே! தமிழர்
இனிப்பெறும் பேற்றின் எழிலார் கனிவளமே!
ஏதிலார்க் கும்இனிய ஏந்தலே ஏகுதியோ
கோதிலா நின்புகழ் கொண்டு.
எல்லாத் திருவும் இசைந்தான் இவனெனவே
பொல்லாத் திருத்தான் பொருமினளோ - நல்லோர்கள்
தம்மை நலிவித்துத் தானாள எண்ணினனோ
அம்மையப்ப னானான் அமைந்து.
கா.அப்பாதுரைப் பிள்ளை