இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈரோடு வேலா (வரலாறு)
வேற்று மொழி படிக் வேண்டுமாம்
ஒரு சாண் பயிற்றுக்கு
ஊமைமொழி போதாதா?
தமிழுந் தேவையில்லையே!
உயிருக்குத் தானே தமிழ்
ஆம்...ஆம்... நான்
உயிரோடு வாழ்
தமிழோடு வாழ வேண்டும்
என் தமிழுக்கே அரியணை
என்னாட்டில்
இனியெதற்கு வேறு இணையணை
கொடுஞ் சிறையில் தள்ளினாலும்,
குற்றுயிராக்கினாலும்
கூறுதனைப் போட்டாலும்
அஞ்சேன்! அஞ்சேன்!
ஒத்ததறிவான் எனின்
முகம் பார்ப்பேன்
இன்றேல் உனக்கும் எனக்கும்
உறவேது என்பேன்.
என் வலக்கையே
உன் இருக்கையை வீழ்த்தினால்
என் என்புடலும் எஃகாகும்.
இனியும் என்னால்
கதைக்க முடியவில்லை
கண்ணீர் விடுகிறேன்
அதுவே செந்நீராய் மாறும்!
191
குறளியம் (1-1-87)