ஈரோடு வேலா (வரலாறு)
209
இணைப்பு - 3
வேலா அவர்கள் செய்த குறளாயப் பணிகள்
1-12-83
15-01-84
15-04-84
10-06-84
25-06-84 -
-08-84
2-08-84
குறளாயந் தொடங்கும் வேட்கை வெளியிடப் பெற்றது.
திருக்குறளார்,ச.தண்டபாணி தேசிகர், பதின் கவனகர் பெ. இராமையா ஆகியோர் முன்னர்த் தொடங்கப் பெற்றது.
தேசிகர் அவர்களுக்குக் குறளியப் பொன் விரலாழி புனைந்து பாராட்டு எடுக்கப் பெற்றது.
வெள்ளையறிக்கை ஆய்வுக் கூட்டம் நடத்தியது. நாடு தழுவிய நாற்பத்தொருவர் ஆய்விற் பங்கு கொண்டனர்.
திருச்சி. தமிழகப் புலவர் குழுக் கட்டடத்தில் விதி முறைகள் பகுதி பகுதியாக ஆய்வு செய்யப்பட்டன. முத்தமிழ்க் காவலர் விருந்தோம்பினார். தமிழ் நாடும் அயல் மாநிலமுஞ் சேர்ந்து எழுபத்தொருவர் வந்து விதிமுறை ஆய்விற் பங்கு கொண்டனர்.
குறளாயக் கூட்டத்திற்கு அடிகளார் வருகை புரிந்து, 'திருக்குறட் பணியில் தீவிரவாதம்' என்ற பெயரிட்டுக் குறளாயச் செயன் முறையைத் திருக்குறட் பேரவையின் 'அறிஞர்குழு'- ஆய்ந்து முடிவை கூறுவதாகத் தீர்மானம் செய்தார். குறளியம் விதிமுறைகளைத் தொகுத்து வெளி யிட்டது.
சேலம் தமிழ்ச் சங்கத்தில் விதிமுறைகள் முற்றும் படிக்கப் பெற்று, நாடு தழுவிய அறுபத்து நால்வர் தம் ஒப்புதல் பெற்றது. புலவர் திரு. மி.மு. சின்னா ண்டார் முன்னின்று நடத்தினார்.