உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சாந்தி நிகேதனம்

தாகூர் பெருங்கலைஞர்; கவிஞர்; இசையிலும் நாடகத்திலும் தேர்ந்தவர்; வங்க மொழியும், ஆங்கிலமும் கொஞ்சி விளையாடும் அளவில் கவிகள் இயற்றியவர்; நாட்டுத்தொண்டிலே ஈடபட்டவர். அவர் தம் எண்ணத்தைச் செயற்படுத்துதற்கு என ஏற்பட்ட அமைப்பே சாந்தி நிகேதனம் ஆகும்.

நிலையத் தோற்றம்:- தாகூர் "நைவேத்தியம்" என்னும் தலைப்பில் இனிய தெய்வப் பாடல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த தேவேந்திரநாத் தாகூர். பெருந் தொகையைப் பரிசாக வழங்கினார். அத்தொகையைக் கொண்டு நைவேத்தியத்தை அச்சிட்டுத் தந்தையாரிடத்தில் படைத்தார் தாகூர். அப்பொழுது ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடம் தந்து உதவுமாறு தந்தையிடம் வேண்டினார். அவ்வாறே தந்தையார் இசைந்தார். இவ்வகையால் 1901 இல் எழுந்த நிலையமே சாந்தி நிகேதனக் கலைக்கழகம் ஆகும்.

கலைத் திட்டங்கள்:- எளிமையில் செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக் கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியைத் தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். இசை முழக்கத்துடன் தொடங்கும் பள்ளி இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப்பெறும். வாய்த்த பொழுதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப்பெறும்.நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிகராகவும் திகழ்ந்தார் தாகூர்.

கல்வி முறை: சாந்தி நிகேதனத்தில் ஐவரே மாணவராக இருந்தனர். பின்னர் நூற்றுக்கணக்காகப் பெருகினர். சிறுவர்களே அல்லாமல் சிறுமியரும் இடம் பெற்றனர். விளையாட்டின் வழியாக விரும்பிக் கற்கும் முறையை உருவாக்கினார் தாகூர். பள்ளிக் கூடம் அடக்கிவைக்கும் இடம் என்றோ. சிறைச்சாலை என்றோ மாணவர் மனத்துத் தோன்றாவண்ணம் சூழ்நிலை யையும், பாடத்தையும், கற்பிக்கும் முறையையும் வகுத்தமைத்தார். அதே பொழுதில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாகவும்,