இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
120
கண்
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
- ஆம்! வலக்கைப் பக்கம் மூன்று; இடக்கைப்பக்கம் மூன்று; ஆறு குட்டிகளை எடுத்து மார்பில் பாலருந்த விட்டுள்ளார். ண்டு கால்களுக்கும் ஊடே இரண்டு குட்டி; காலுக்குத் தெற்கே இரண்டு, வடக்கே இரண்டும் ஆக ஆறு குட்டிகள்! மொத்தம் பன்னிரண்டு.
பொன் : சுகலன் என்பான் மக்கள் பன்னிருவர்; அவர்கள் தேவகுருவின் வசைமொழிக்கு ஆளாகிப் பன்றிக் குட்டியாகினர். பன்றிக்குட்டிகள் தாயின்றித் தவித்தன; அவற்றுக்குத் தாயும் ஆயினான் இறைவன்! அக் குட்டிகளை ஊட்டி வளர்த்தான். பின்னே அவற்றை அறிவாற் சிறந்தவராக்கிப் பன்றிமுக மானிடராய்ப் பன்றிமலையில் வாழச் செய்தான். கீழே பன்றிமுக மனிதர்கள் கும்பிட்டுக்கொண்டு நிற்பது தெரிகிறதா?
கண்
- இதன் வடக்குப் பக்கம் ஒரு வீரன் அம்புகொடுத்து ஒரு பன்றியைக் கொல்கிறானே! அம்பு பன்றியை எடுருவும் சிற்பம் உள்ளதே?
பொன் : ஆம். அதுதான் தாய்ப்பன்றி; அம்பு ஏவுபவன் இராசராச பாண்டியன் என்பான். இது திருவிளை யாடலில் வரும் 'பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்த படலச்' செய்தி.
கண்
- இறைவன், எவ்வுயிருக்கும் உயிரானவன்! எவ்வுயி ருக்கும் அருள் சுரப்பவன்; அவன் முன்னர், வலியது மெலியது இல்லை! உயர்ந்தது தாழ்ந்தது இல்லை! ஒப்ப நாடி அத்தக அருள்பவன் அவன்; அத் தகையவன், கடையனினும் கடைப்பட்டவன் எனினும் தனக்கும் அருள் புரிவான் என்னும் நம்பிக்கையை ஊட்டுதற்காக வைக்கப்பெற்ற வழிக்காட்சிகள் இவை. பொன் : வாயில்
தூண்களுக்கு இப்பாலும் அப்பாலும் தெற்கிலும் வடக்கிலும் இருப்பவை ஓர் ஒப்புமை யுடையவை; பொதுவாகக் கலையே ஓர் ஒழுங்கு முறையைத் தனக்கென ஊடகமாகக் கொண்டு உயர்ந்து ஓங்குவதுதானே!