இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20
இளங்குமரனார் தமிழ்வளம் - 33
37. தவளையார்
தவளை யாரும் வருகின்றார்; தாவ முடியா துருள்கின்றார்; தவலைப் பானை பிடிக்கின்ற
தண்ணீர் ஏனோ குடிக்கின்றார்?
குரலை உயர்த்தி இடிக்கின்றார் கொட்டும் முரசை மடக்கிவிட!
உரலில் குழவி இரைந்தாலும்
ஒட்டி வருமோ சிநிதேனும்?
தொண்டைப் பறையை அடிக்கின்றார்
தூள்தூள் என்றே துடிக்கின்றார்;
சண்டைக் காக எழுந்தாரா?
சரிதான் பகைவர் விழுந்தாரே!
38.பூனை
பூனை நல்ல அழகாம்!
புதிய குட்டி அழகாம்!
தேனைத் தொட்ட மென்மை
திகழும் பூனைத் தன்மை!
மெத்தைக் காலின் பூனை; மெதுவாய் ஏறும் பானை; மொத்தைத் தயிரைக் குடிக்கும், மூலை பார்த்துப் படுக்கும்!
பகலில் அமைதி கொள்ளும்; இரவில் எழுச்சி துள்ளும்; அகலும் கண்கள் சுருங்கின், அந்த அமைதி நெருங்கும்!
குப்பைக் கிடந்தால் எலிகள் கூடிக் குலாவும் புலிகள்