இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிற்றருவி - குழந்தையர் பாடல் 66. தமிழ்
தமிழே இனிய உயிராகும் - அத்
தமிழே வாழ்வுப் பயிராகும்.
தமிழே சுவையாம் நீராகும் - அத்
தமிழே வளமாம் சோறாகும்.
தமிழே பாகுச் சுவையாகும் - அத் தமிழே அறிவுக் குவையாகும்.
தமிழே விரும்பும் விருந்தாகும் - அத்
தமிழே பிணியின் மருந்தாகும்.
தமிழே பண்பின் அணியாகும் - அத்
தமிழே மானத் துணியாகும்.
தமிழே விளைவின் நிலமாகும் - அத்
தமிழே உயிரின் நலமாகும்.
தமிழே அருவி ஒழுக்காகும் - அத்
தமிழே அமிழ்த முழுக்காகும்.
தமிழே ஒளியின் பிறப்பாகும் - அத்
தமிழே உணர்வின் சிறப்பாகும்.
தமிழே தமிழே தானாகும் - அத்
தமிழே வற்றாத் தேனாகும்.
தமிழே தமிழே தானாவான் - அத்
தமிழால் தமிழர் தேனாவான்.
67. அன்பு
பாலும் தேனும் கலந்ததுவோ? பாகும் பருப்பும் இணைந்ததுவோ? தோலும் துளைக்கும் குளிராகித் தொல்லை நீக்கும் அன்பிணைவே!
41