இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிற்றருவி - குழந்தையர் பாடல்
45
72.
தாத்தா
செல்வம் சேர்த்த தாத்தா;
செழுமை சேர்த்த தாத்தா;
கல்வி பெற்ற தாத்தா;
கனிவு மிக்க தாத்தா.
ஊருக் குதவு தாத்தா;
உழைப்பு மிக்க தாத்தா;
யாருக் கேனும் நன்மை
ஆய்ந்து செய்யும் தாத்தா.
உலகம் வாழ எண்ணும் உயர்வு மிக்க தாத்தா;
கலகம் அறியாத் தாத்தா;
கருணை மிக்க தாத்தா
எங்கள் தாத்தா போல,
எவர்க்கும் தாத்தா இருந்தால்,
பொங்கும் இன்ப உலகம்
புவியே ஆகும் உண்மை!
73. பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி,
பாடு பட்ட பாட்டி;
கூட்டுக் குடியில் இருந்து,
குணத்தில் உயர்ந்த பாட்டி.
கதையும் பாட்டும் பாட்டி
கட்டிக் கட்டிச் சொல்வார்;
விதையும் விளைவும் போல விரும்பு மாறே செய்வார்.
பாட்டி சொன்ன எல்லாம்
எழுதி வைத்தி ருந்தால்,
ஏட்டை வண்டி அளவாய்
ஏற்ற வேண்டி இருக்கும்!