இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
இளங்குமரனார் தமிழ்வளம் -33
காவல் தெய்வம் அண்ணன்.
எங்கள் அக்கை போல
77. அக்கை
எவர்க்கு வாய்ப்பார் அக்கை?
எங்கள் போலப் பேறும்
எவரே பெற்றார் இங்கு?
அக்கை என்றால் அக்கை;
ஆடிப் பாடும் அக்கை;
சர்க்க ரைபோல் பேசும் சால்பு மிக்க அக்கை!
வாழ வேண்டும் வகையை
வாழ்ந்து காட்டும் அக்கை;
வாழை மரம்போல் குடும்பம் வாழ வாய்க்கும் அக்கை.
அம்மா வுக்குப் பின்னே
அம்மா ஆன அக்கை;
சும்மா சொல்ல வில்லை
சொல்லும் உயிரே அக்கை!
தம்பி எள்றால் தம்பி
தாவும் அன்புத் தம்பி
வம்பு துன்பு தெரியா
வடிவ மான தம்பி.
அப்பா அம்மா எவர்க்கும்
78. தம்பி
அடியின் நிழலே ஆகிக்
கொப்புத் தேனாய் மழலை கொட்டித் தட்டித் திரிவான்.
கண்ணில் மின்னல் உண்டா?