உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

கிறுக்கு ஓட்டம்

‘ஓட்' டென் றுரைத்தார்;

ஓட்டினான் வண்டியை!

'எங்கே?' என்றார்;

ஏவிய பெரியவர்;

'எங்கே என்பது

எனக்குத் தெரியாது;

ஓட்டென ஓட்டினேன்’

என்றான் ஓட்டி;

‘ஓட்டுநீ எனக்கும்

தெரியாது என்றார்

ஓட்டச் சொல்லி

ஓட்டிய பெரியவர்:

உலக ஓட்டம்

இவ்வகை யாலே

நிலவுதல் உண்மை!

நினைப்பவர் எவரே?

ஓடுவது எங்கென

ஒருவரும் அறியாது

ஓடும் உலகம்

ஒருநாள்

கிறுக்காய்ச் சிரிக்கா

திருக்கவும் ஆமோ?

பறவைக் கூட்டம்

வேடந்தாங்கலுக்கு எத்தனை பறவைக் கூட்டம்

எத்தனை வகைக் கூட்டம்

எத்தனை நாட்டுக் கூட்டம்

மண் கடந்து கடல் கடந்து விண் கடந்து வரும் கூட்டம்.