186
இளங்குமரனார் தமிழ்வளம் 34
தேவார திருவாசகங்களில் ஆராக்காதல் கொண்டு அடிகளார் கற்றமை, அவர் வாக்காலே அறிய வாய்ப்பவை இவையும் ன்னவையுமாம்.
“உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்" (3527)
எனத் திருமந்திரக் கல்வியைச் சுட்டுகிறார்.
திருக்குறள் :
66
"இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால் இரத்தம் ஈதலாம் எனல் உணர்ந் திலையோ"
“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு”
நெஞ்சறிவுறுத்தலில்,
-என்பது
-என்பது அக்குறள் (1054)
“கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே (411)
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும்
திகழ்வாய் மையும்நீ தெளியாய்" {433-435)
“உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்
நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்” (466, 467)
“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது
பற்றற்றால் அன்றிப் பலியாதால்” (624)
என்னும் குறள்மணிகளைப் பெய்து வைத்த பெற்றிமை
நூற்கல்வி பெறாமல் கூடிவருவதோ?