பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்
உயிர்ப்பலி
15. நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையும் நல்கும்யாம் காணேம்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின் வாய் வீழ்ந்தான் தலை.
குருதிப்பலி
16. ஆடினி பாடி யளவின்றிக் கொற்றவை
பாடினி பாடற் படுத்துவந்தாள் -நாடிய
தோளுழலை யாடுவோன் தோளினும் தூக்கமைந்த
தாறுழலை யாடுவோன் தான்.
புறத். 4
177
பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.
பொதுவியல்திணை
வேலன் வெறியாட்டு
17. அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத்
தமரகத்துத் தன்மறந் தாடும் - குமரன்முன்
கார்க்காடு நாறும் களனிழைத்துக் காரிகையார்
ஏர்க்காடும் காளை இவன்.
இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று.வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது.
போந்தை மலைந்தாடியது
18. ஏழக மேற்கொண் டிளையோன் இகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - ஏழுலகுந் தாந்தயங்கு நாகம் தலைதயங்க ஆடாமோ போந்தையங் கண்ணி புனைந்து.
வேம்பு மலைந்தாடியது
19. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுதல் இறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாற்றியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று.