பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் பெயர் முதலியன பொறித்தது
38. கைவினை மாக்கள் கலுழக்கண் நோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது.
சிறப்புப் படைத்தது
39. அன்றுகொள் ஆபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்று கொள் பல்லான் இனமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ கோட்டம் வகுத்து.
கல்வாழ்த்து
40. ஆவாழ் குழக்கன்னுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று.
புறத். 5
வஞ்சித் திணை
வயங்கல் எய்திய பெருமை
41. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினால் - நாற்கடல்சூழ மண்மகிழும் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோன் கேம்பட்டான் வேந்து.
நெடுமொழி
42. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்
ஏனாதிப் பட்டத் திவன்.
-
-இது பிறர் கூறிய நெடுமொழி.
181
புறத்.8