-
உழிஞைத் திணை
ஏணிமயக்கம்
43 சேணுயர் ஞாயிற் றிணிதோளான் ஏற்றவும் ஏணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு.
- இது புறத்தோர் ஏணிமயக்கம்.
44. இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோற்கு வாயில் எவனாங் கொல் மற்று.
இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.
முற்றிய முதிர்வு
45. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றார் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோல் அரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு.
இஃது புறத்தான் முற்றிய முதிர்வு.
46. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக்
கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலையில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள் கொட்டி யார்த்து.
இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.
நொச்சி
47. இருகன்றின் ஒன்றிழந்த ஈற்றாப்போற் சீறி
ஒருதன் பதிகற் றொழியப் - புரிசையின்
வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று.
- இஃது அகத்துழிஞையோன் எயில்காத்த நொச்சி.