5. செவ்வேளின் வீறு
"கருவிலே திரு என்பது பழமொழி. "கருவிலே திறம்" என்பதை மெய்ப்பிப்பது செவ்வேளின் வீறு.
பிறந்த நாள் வெற்றி :
“பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே"
என்கிறது பரிபாடல் (14:25-26)
<<
'தாமரைப் படுக்கையில் பிறந்த அந்நாளிலேயே வச்சிரப் படை கொண்டுவந்த இந்திரன் முதலியோர் அச்சமுறுதற்குக் காரணமான சிறப்புடையவனே" என்பது அவன் பிறந்த நாள் வீறு விளக்குவதே!
வறுங்கை வெற்றி :
இதனினும் அவ்வீறு இருந்த வகையை விளக்கிக் காட்டுவது போல் அமைந்தது, அவன் வறுங்கை கொண்டே தன் பகையை ஓடச்செய்த பெருவீறு ஆகும்.
'ஓங்கு விறற் சேஎய்,
ஆரா உடம்பினீ அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய'
என்கிறது பரிபாடல் (5:54-56).
-
—
ஆரா உடம்பு என்பது நிரம்பாத வளராத உடம்பு பிறந்த நிலையில் இருந்த உடம்பு. அமர்தல் - விரும்புதல்; விளையாடிய போர் - விளையாட்டுப் போலச் செய்த போர்: வறுங்கை - படைக் கலம் ஏந்தாத வெறுங்கை. புரந்தரன் - இந்திரன். உடைதல் தோற்றோடுதல்.
"பிறந்த அப்பொழுதே விரும்பி விளையாட்டாகச் செய்த நின் வறுங்கைப் போர்க்கு ஆற்றாமல் இந்திரன் தோற்றோடுமாறு